கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

இமை இரண்டும் முத்தமிட
பார்வை பறிபோனது..........
பார்வையின் ஸ்பரிசத்தில்....
இமைகள் தவித்தன......
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........
நீலவானில் தங்கத்தட்டாய் நிலவுமகள்......
மின்மினிபூச்சிகளாய் நட்சத்திரப்பட்டாளம்..
வெண்பஞ்சுக்கூட்டமாய் மேகங்கள்...வானை
பார்த்திருந்த மண்ணுக்கோ பொறாமை..
வெடித்து சிதறியது மண் மனது.....
தீப்பிழம்பாய் கோப அனலை க்க்கியது......
மண்மனம் புகைந்தது.....பார்த்திருந்த
வானம் கவலையில் முகம் கறுத்தது.........
தன்னையே தானம் செய்தது நெய்..
நெய் செய்கையால் மனம் ஈரமான
திரி..எரிந்து தவம் செய்த்து..........
தானமும் தவமும் சுடரை தந்தது...

my 1st poem...........

அழகான தமிழ் என்தன் உயிரானது ............
அன்பான மொழி நம் நட்பானது
நட்புக்கள் நம்மை வரவேற்குமே..............
நம்பிக்கை வாழ்வின் நிலையானதே..
என்னையும் கொஞ்சம் வாழவிடுங்கள்.
இழப்பதற்கில்லை எதுவும் என்னிடம்.
கடன் தர யாரும்மில்லை.எமை
கவனிப்பார் எவருமில்லை..
எதிரியும் காப்போனுமாய் சேர்ந்து.எனை
...ஏதிலியாக்கிவிட்டார்கள்..இப்போ
ஏக்கத்தையே சொந்தமாக்கிவிட்டார்கள்..
புலத்திலுள்ள புல்லுருவிகள்..என் பெயர்
சொல்லி ஒரு புறம் வயிறுவளர்க்க
களத்திலுள்ள கபோதிகளோ என்னையே
பகடைகாயாக்கி விற்பனை செய்யுதுகள்
பெருநிலப்பரப்பில் சுயமாய் சீவித்தவன்.இன்று
பெறுமதியற்றுப் போய்விட்டேன்.
நெஞ்சினில் பூத்த நெருப்புப்பூக்கள்...
வஞ்சக உலகின் வன்மம் கண்டு..
நெருப்பாய் பூத்த நெருடல்பூக்கள்....
முகன்று பார்க்க முல்லைபூவல்ல..
முயன்று பார்ப்பின் புரியும் ..
முடிவில் பூவை தெரியும்
பூக்களின் புன்னகை நீதானா.....
புதுமை தரும் புரட்சி நீதானா...
நிலவின் முகம் நீதானா...என்
நினைவின் முகவரி நீதானா...
நினைவாக வந்தாய் நீ........
...நிலையாக நிற்பாயா....இல்லை
கனவாகி போவாயா.....
வார்த்தை தவம் கிடந்தேன் ..உனை
வாழ்த்தி இன்பம் கொள்ள..
நேற்றை வரை நெஞ்சில் இருந்தாய்...
இற்றை முதல் நெஞ்சில் வைத்தாய்
முகில்களுக்குள் சண்டை.........அதற்காக
இடி சத்தமிட்டு கத்தியது ....பார்த்து கொண்டிருந்த
மின்னல் தனக்கு தானே தீ மூட்டியது...தாங்கமுடியாத
மழை ஒவென்று கதறி அழுதது......இதுகேட்ட
மண் மனது ஈரமாகியது
சிப்பி தன்னிலொரு முத்து வருவதற்கு......
துளி நீர் ஒன்று தவம் கிடக்கும்...உன்
அகத்தின் அருகினில் அடிமை கொள்வதற்கு
புறத்தில் நின்று நான் தவத்தை செய்கிறேன்....
சிறகின்றி பறவை இல்லை.........
சிற்பியின்றி சிலை இல்லை...
திரியின்றி தீபம் இல்லை.......
அலையின்றி கடல் இல்லை...
அன்பின்றி நீ இல்லை....
நீயின்றி நான் இல்லை....இறைவா...!!!!!!!
மலர்கள் எல்லாம் காத்துகிடக்கின்றன...
உன் வரவுக்காய் மலர்வதற்கு........
வண்டுகளும் கூட காத்துக்கிடக்கிறதே.......
மலரை நுகர்வதற்கில்லை....என்றும்
வாடாத உனை நுகர.........
உனை தொட முடியாமல் உன்னிழல் தொடமுயன்றேன்..
நிழலை கூட உன்னுடன் கூட்டிச்சென்றுவிட்டாய்....ஆனால்
உன் நினைவுகளை என்னில் கட்டிப்போட்டுவிட்டேன்..
எனை வெட்டியெடுத்தாலும் கட்டை அவிழ்க்கமுடியாது.......
காலை வேளை கதிரவன் உதிக்கையில்.
சாலை ஒரம் நடந்து செல்கையில்..நான்கு
காலை உடைய சாம்பல் நிறத்து..
வாலை கொண்ட நாயை ஒரு
பாலை குமரி அழைத்து வருகையில்..நான்
வேலை செல்லும் வேளை வந்ததால்..என்
காலை கடித்தது நாய் ..பார்த்த
பாலை குமரி பதறிபோகிறாள்..நானோ
நூலை போல நொந்துபோகிறேன்..வைத்திய
சாலை செல்ல சொல்கிறாள் ...தான்
மாலை வந்து பார்ப்பதாய் சொல்லி..
சோலை கிளியாய் செல்கிறாள்.......என்
காலை வலி விட்டு மனதை தொட்டது....
மாலை வந்த மங்கை கையில் ஒரு
மாலை இருந்தது .. பார்த்த என்மனதில்
பாலை வார்த்தது போல இருந்தது...
காலை நேரம் கதிரவன் உதிக்கையில்
சாலை வழியாய் சென்றவள் ஒருத்தி என்..
காலை மிதித்து காயம் செய்து மாயமானாள்..
நூலை போல நொந்தது என் மனது
மாலை வந்து மருந்து இட்டு மனதில்
...பாலை வார்த்து பறந்து சென்றாள்........
துள்ளி வரும் மான்குட்டி நீயடி......
பள்ளி கொள்வாய் என்மனதில்...
கள்ளி உன்தன்பார்வையினால்.....
நுள்ளி விட்டாய் என்மனதை.
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
கொஞ்சமாய் எனை கொஞ்சி நின்று
கெஞ்சவிட்டு மீதி தனை தந்து...
வாஞ்சையில் என் மடி மீது வந்து....தன்
கட்டி இழுக்கும் காந்தகண்களால் ......
கதைகள் பேசி.. என் மார்பினில்..தன்
...தலை மோதி மயக்குவான் என் மழலை ..............
போதிக்க இங்கே புத்தர்கள் ஆயிரம்..
சாதிக்க இனி நாம் புதிதாய் பிறப்போம்........
ஆதிக்க சக்திகளை அடக்கியாள..நாம்
மோதிக்க வேண்டும் அதன் ஆணிவேரினை....
பூவினில் உறைந்து இரவினை கழித்தது பனித்துளி..........
இரவினை விரட்டி அருகினில் வந்தது சூரியன்.......
சூரியன் அணைப்பில் உருகிப்போனது பனித்துளி....
பனித்துளி பிரிவை தாங்காது அழுதது பூவிதழ்............
பூப்பறிக்கலாம் வாருங்கள்....என் வீட்டு
தோட்டதில் பூத்துள்ள பூக்களிவை.....
புன்னகைக்காய் பூத்த சிரிப்பு...
பெண்ணுனக்காய் பூத்த பண்பு...
என் தமிழுக்காய் பூத்த நினைப்பு..
அதை வாழவைக்க பூத்த பொறுப்பு..
கயவர்கள மேல் பூத்த வெறுப்பு......
என் மனதில் பூத்த அன்பு....
உனக்காய் பூத்த பூவிது நட்பு..
நில மகள் பனிப்போர்வை பூணுகிறாள்..அங்கே
நிலவு மகள் பால்நிலா பொழிகிறாள்...கூடவே
பூஞ்சோலை வழியே தென்றல் வந்து தழுவுகிறது..
நீயிருக்கையில் இவையெல்லாம் தேவையா.........
என் வீட்டு மல்லிகை மணம் வீசி நிற்கிறது...ஆனால்
எதிர் வீட்டு ரோஜாவோ கண்ணை பறிக்கிறதே...ம்ம்ம்
மணம் வீசினாலென்ன....மனம் கவர்ந்தாலென்ன.........
எல்லாமே மலர்களதானே..சூடிக்கொள்வதும் மங்கைகள்தானே.....
விழியில் உனை வாங்கி.
இமையால் விழி மூடி.
கனவை உருவாக்கி.......
கவிதை தருவேனே....
சொல் எடுத்து மாலையாக்கும் கம்பனல்ல நான்
வில் எடுத்து அம்பு தொடுக்கும் அர்சுனனல்ல நான்
கல் எடுத்து வீசும் கயவர் கூட்டமில்லை நான்
வால் பிடித்து வாழ்வை வழமாக்கும் வஞ்சகனல்ல நான்
கோல் கொண்டு பார் போற்ற வாழ்ந்த தமிழன் நான்
விண்ணில் விளையாடும் மேகக்கூட்டங்கள்..அதனால்
மண்ணில் வந்துவிடும் மழைநீரின் ஓட்டங்கள்..
பெண்ணில் உருவாகும் காதல் ஓட்டங்கள்..அதனால்
கண்ணில் ஈழையோடும் நீரின் மூட்டங்கள்
என்னை எப்பொழுதும் இழுத்து வைத்திருகிறாய் ..நான்
இறந்தாலும் உன்னுள் புதைத்து வைத்திருக்கின்றாய்...
உன்னிடம் மட்டும் எனை ஈர்க்கும் சக்தி இல்லாவிட்டால்...உனை
விட்டு விலகி விண்ணோக்கி சென்றிருப்பேன்
மனம் எனும் நிலம் உழுவோம்....அதில்
அன்பு எனும் விதை நடுவோம்...அங்கே
பண்பு எனும் நீரூற்றி ....அதை
பக்குவமாய் வளர்ப்போம்.....
பொறாமை களை பிடுங்கி......பின்
...பொறுமை உரம் இட்டு....
அருமையாக வளர்ப்போம்.......அறுதியில்
அறுவடைதனில் அகிலம் உன்வசம்
அலைமோதும் கடலோரம் அழகான மணல்மேட்டில்...
குழிதோண்டி நீருற்றை கண்டுகொள்வோம்...
கடல் நீரில் கால் நனைத்து அலையோடு விளையாடி......
கடலோரம் காலாற நடந்து செல்வோம்......
இதமான தென்றலும் சுகமாக வீச...அங்கு
இனிதான கதைகள் பேசிக்கொள்வோம்
மழை மூட்டம் வந்து நுனிமூக்கில்....மழை
துளிபட்டு கடலோடு பிரிவு கொண்டிடுவோம்.....
வெண்ணிலவே நீ பௌர்ணமியில் கூட வரவில்லையே ஏன்
இன்று என்ன பூரண கிரகணமா.....எனை
காக்க வைப்பதில் உனக்கு அத்தனை சுகமா....அதைவிட சுகம்
உனக்காக காத்திருப்பது.........
இசை கொண்ட தமிழ் அழியாது...யார்
வசை பாடினும் அது வாழும்...நாம்
விசை பலகை கொண்டு ....முடிந்தால்
அசை என்று அறைகூவல் விடுவோம்
தேய்ந்து தேய்ந்து தெரியாமல் போகும் நிலவே...உனக்காய்
காய்ந்து காய்ந்து கருகி போகிறேன்...தினமும்
மாய்ந்து மாய்ந்து சொல்வது புரியலயா..நான் அழைக்கையில்
பாய்ந்து பாய்ந்து செல்கிறாயே ஏன்.........
பூக்களின் புன்னகை நீயா........
நீ பேசிடும் வார்த்தைகள் தேனா......
தேனினை குடிக்கும் வண்டு நானா........
பூவினை சூடிக்கொள்ளலாமா.......
வாசல் வந்தது வண்ண நிலவு...அதனால்
ஊசல் ஆடியது என்தன் உள்ளம்...நிலவிடம்
காதல் கொண்டது என்தன் மனம் ....நிலவோ
சாதல் கொள் நீ என சொல்லி சென்றது...
தன்னை சுற்றிவரும் நிலவிடம் பூமிக்கு காதல்..
தொலைவிலுள்ள சூரியனிடம் தான் நிலவுக்கு காதல்..
ஒரு பகல்பொழுதில் மூவரும் வரிசையாக சந்தித்துவிட்டனர்.....
நிலவின் காதல் பூமி அறிகிறது..பூமி முகம் இருண்டுபோகிறது...
காலைக்கதிரவன் கண்விழித்தான்...அவன்
நீலவானை எட்டிப்பார்க்கையிலே..
வானம் வெட்கி சிவக்கிறதே...அதுவரை
காதல் கொண்ட நிலவும் காணாதுபோய்விட்டாள்
என் சுவாச காற்றில் நுழைந்து....
என் வசமாய் ஆகிப்போகினாய்....
உனக்காய் கரைகின்ற என் மனதில்.....
நீ கரையாதிருக்க உனை ...என்
உயிருடன் ஒட்டிவைப்பேனே.........
மனதில் வந்து அழகாய் பூத்தாய்......
கனவில் வந்து கதைகள் சொன்னாய்..
நினைவில் நின்று நிம்மதி தந்தாய்......
உறவில் என் உயிராய் வந்தாய்
மழை தடுக்கும் குடை வேண்டாம்..........
அலை தடுக்கும் கரை வேண்டாம்..........
பயிர் தடுக்கும் களை வேண்டாம்..........
வீரம் தடுக்கும் பயம் வேண்டாம்..........
பாசம் தடுக்கும் வேசம் வேண்டாம்..........
...அன்பை தடுக்கும் பொறாமை வேண்டாம்..........
அறிவை தடுக்கும் ஆணவம் வேண்டாம்..........
காதல் தடுக்கும் காமம் வேண்டாம்..........
பக்தி தடுக்கும் பகட்டு வேண்டாம்..........
முக்தி தடுக்கும் மோகம் வேண்டாம்..........
உன்னை நான் பார்க்கும்போது
கண்ணை நீ முடிக்கொண்டாய்....நான்
என்னவோ செய்யும் போது..
என்னை நீ பார்க்கின்றாயே..
விண்ணை நீ தாண்டிக்கொள்ளும்.......
வல்லமை கொண்டாய் நீயே............
மின்னலாய் வந்து என்தன்.......
மனதினை கொள்ளைகொண்டாய்...
நீலவண்ண கண்ணா என்தன்
நெஞ்சில் குடியும் கொள்வாய்..உன்
பாசவலையில் என்னை கொஞ்சம்
பற்றிக்கொள்ள செய்வாய்..........
குழலை பிடித்த கையால் ..நீ
கோதை அணைத்துக் கொள்ளும்..
விதத்தை பார்த்து நானும்.
வியந்து போயிக்கொண்டேன்..என்ன..
மாயம் செய்து நீயும் எனை உனில்
வாசம் கொள்ள செய்வாய்
அன்பினில் விளைந்து அறிவினை
தந்து அகிலமும் நீயானாய்...
பண்பினில் கலந்து பாசத்தை
பொழிந்தாய் பரிதவிக்கும் எனக்கு.........
உன்னில்லிருந்து என்னுள் வந்து
...விதைத்தாய் எனில் உன்னை...........
விந்தை செய்யும் உன்தன்
அன்பில் திளைத்துப்போகிறேன்.......
மேகத்தில் மறைந்துள்ள நிலவே ......உனை ...
என் வீட்டு முற்றதில் நின்று தேடுகின்றேன்..
உன் தாகத்தில் துடிக்கும் எனக்காய் ..நீ
வானத்திலிருந்து வாராயோ...வரும்வழி
தெரியாதிருந்துவிட்டால் ....வரும்
மழைத்துளியுடன் சேர்ந்து வாராயோ...
மழைத்துளி மண்ணைத்தொடுமுன்...அதை
கைகளில் ஏந்திக்கொள்வேனே...உனை
துளிதனில் கண்டுகொள்வேனே...
நெஞ்சினில் வந்திடும் பனிக்கூட்டம்......
உன்தனை தொட்டதும் உருகியதே....
கண்களில் தோன்றிடும் அனைத்திலும்...........
விம்பங்கள் நீயாய் தெரிகிறதே....
பெய்திடும் மழைகூட உன்தன்
பெயரினை சொல்லி பெய்கிறதே......
மழை ஏந்திடும் மண்கூட உன்
பெயர் கேட்டு ஏங்கியதே
பற்றி எரிக்கும் நெருப்பாய் ஆனாய்..எனை
சுற்றி வளைத்து மனதில் தூண்டில் இட்டாய்...
வற்றி விடாத அன்பை கொட்டிவிட்டாய்...
நெற்றி கண்திறந்து நேசக்கணை எறிந்தாய்.......
விழிகளை வாளாக்கி எனை வெட்டினாய்.....
காயம் இன்றி மாயம் செய்தாய்....
மொழிகளை மௌனமாக்கி எனை பற்றினாய்......
மோகம் என்ற யாகம் செய்தாய்
துள்ளி வரும் பெண்ணே..உன்
வெள்ளி கொலுசு ஓசை கேட்டு..
கள்ளி நீ என்தன் மனதை கொஞ்சம்..
கிள்ளி விட்டாயடி
மொட்டுவிடும் மலரில்...
பொட்டு வைத்தால் போல்....
வண்டு ஒன்று வந்து நிக்க..
மகிழ்வில் மலர்ந்தது மலர்......
வலி தாங்கும் இதயம்...
கிலி கொள்ளாது...யாரையும்
பலி கொடுத்து...அடுத்தவர்
பழி எடுக்காதே...

mercredi 13 octobre 2010

ஆறுதலை வேண்டி ஆறுதலையோனிடம் போனேன்..அவனே
மாறுதலை வேண்டி மயிலேறிப்போய்விட்டானாம்...பின்
மாறுதலை கொண்டோனிடம் போனேன் அவனோ...யாருக்கும்
ஊறுதலை கொடுக்காது ஊரோர மரதடியில் ஒதுங்கிவிட்டானாம்..
மலரே ஒரு வார்த்தை சொல்லாய்........
மணம் வீசும் வார்த்தை சொல்வாய்...எனை
பறிக்காதே என்று பகர்வாய்...அழகை
பார்த்து மட்டும் செல் என சொல்வாய்
நேற்றுவரை நேரம் போகவில்லை....இன்று
உனை பார்த்தமுதல் நேரம் போதவில்லை...
காற்றும் கவிதை சொல்லும் மாயம் கேக்கிறேன்..
கண்களின் ஏக்கம் உன் கனவுக்காய் கரைவது
அண்ணலும் நோக்கினான்.........
அவளும் நோக்கினாள்.......
புதிய நோக்கியா மூலமாய்......
கைக்குள் அடக்கமாய்.........
கதைகள் பேசி....
......கலகம் மூட்டி.....
வழி தெருவில்.......
தனக்கு தானே பேசி.....
அழைப்பு மணி...
அடுத்தவனுக்கு வர..
இவன் தன் சட்டை
பையை தடவிக்கொள்ளும்...
பதற்றம் ..பார்க்க பரிதாபம்...!!!
பூவினில் பின்னிய கூடையிலே....உன்
புன்னகை அள்ளிப்போட்டு விட்டு...
காற்றினில் ஏற்றி அனுப்பி வைப்பாய்...
கைகளில் ஏந்தி கொள்வேனே....
பூவின் பாரம் தாங்காத...முல்லை
பாரி தேரினை தழுவியது...
முல்லையின் தழுவலில் முழ்கிய..
தேர் பாரியிடம் விடைபெற்றது...
கால்கொலுசின் ஓசை கேட்டு.......
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
மைவிழியாள் மனம் நோக மன்னனவன் பேசிவிட..
மைவிழியில் நதி பிறந்து மண் தனையும் நனைத்துவிட..
மன்னனவன் மனம் கரைந்து மங்கையிடம் மையல் கொள்ள...
ஊடல் கொண்ட காதல் என்பதும் இதுதானோ.......
இனிதாய் புலரும் காலைப்பொழுதில்...
அழகாய் நீயும் புன்னகை செய்வாய்.....
கனிவாய் நாளும் கடந்து செல்ல...
மகிழ்வாய் நீயும் வார்த்தைகள் பகர்வாய் ........
பிரியாத வரம் ஒன்று .......
தருவாயா முருகா...
வள்ளி தெய்வானையுடன்...
வானம் எல்லாம் மயில்..
வாகனதில் செல்பவனே....
பக்கம் வர அருள் தாருமையா........
நட்சத்திரப்பூக்கள் நடுவே தங்கநிலா..
பூரிப்பில் வானம் புதுப் பொலிவுடன்....
எங்கிருந்தோ வந்த மழை மேகம்...
எல்லாவற்றையும் மறைத்து விட்டதே...
துயரம் தாங்காது வானம் அழுதது...
குளிர் காற்றும் சிலிர் பனியும்.......
துளிர் விடும் செடிமீது படர....
ஒளிர் விடும் சூரிய பார்வையில்...
தளிர் தலை நிமிர்ந்ததே
கண்கள் காட்டும் உலகை...
கண்ணீர் காட்டும் உள்ளத்தை...
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
...அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
பொன்னின் நிறமும்...
பூவின் மணமும்...உன்னில்
இருக்க கண்டேன்..
மென்னம மனமும்...
தன்மை குணமும்...உன்னில்
அடைக்கலம் கொண்டதோ...
விதை முளைத்து மரம் வளர்ந்து.............
இலை பரப்பி நிழல் கொடுக்கும் வரை...
வெயில் கொடுமை அனுபவிக்க முடியுமா...
வளர்ந்தமரம் பார்த்து நிழல் தேடுவது போல்...
நிச்சயமில்லா எதிர்காலதுக்காய்...
நிதர்சன நிகழ்காலம் இழக்கமுடியுமா...
மரம் ஒன்றினை வளர்ப்போம்...அதுவரை
நிழல் நாடி செல்வோம்.........
தீட்டும் போதுதான் கத்தி கூர்மை கொள்ளும்....
மீட்டும் போதுதான் வீணை இசையை கொடுக்கும்...
ஊட்டும் போதுதான் மழலை உணவை உண்ணும்..
பாராட்டும் போதுதான் கலைஞன் உவகை கொள்வான்.....
விதை ஒன்று நட்டேன்..கவிதையாக
உரம் இட்டு வளர்த்தேன் மரமானது..
உணர்வென்ற உயரிய மனமாது....
கல்லாமை ...உனில்
இல்லாமை செய்
பொல்லாமை..தனை
நில்லாமை ஆக்கு
இறைக்க இறைக்க தான் ஊறும்....அன்பு
நிறைக்க நிறைக்க தான் சேரும்..பணம்
மறைக்க மறைக்க தான் கூடும்...ஆவல்
குறைக்க குறைக்க தான் அடங்கும்..கோபம்
அழகாய் சிரிக்கும் மலர் ..நட்..பூ
பரிவாய் இருக்கும் மலர்...பண்..பூ
தனிமை கெடாத மலர்...கற்...பூ
எனக்கான உன்தன் மலர்...நினைப்...பூ ....
வாய் பேசா மொழிகள்........
விழி பேசியதோ...நீ
வீசும் பார்வை .....
உயிர் பறிக்கிறதே........
உன் தோல்விகளை ........
உன் ஆசானாக ஏற்றுக்கொள்...
உன் வெற்றிகளை ............
உன் நண்பனாக மாற்றிக்கொள்
பூங்காற்றும் கவிதை சொல்லும்.........
உன் மீது பட்டு செல்கையில்....
நதி கூட அழகாகும்
நீ அதில் கால் நனைக்கையில் ..............
பூவின் மேல் உறங்கும் பனித்துளியாய்...
பனித்துளி மேல் படரும் பூங்காற்றாய்...
பூங்காற்றுடன் கொஞ்சும் உன் மூச்சாய்..
மூச்சினில் கலந்து நெஞ்சினை அடைவேன்.......
தொழிலாளிகள்...........
கறுப்பு வைரங்கள்......
ஆனால்.......
புத்திசாலி முதலாளிகள்..........
கரும் கற்களாகவே வைத்திருப்பர்............
இரவினில் நிலவுடன் இணைந்ததாலோ.....
விடியலில் வானம் நாணி சிவந்தது.....இல்லை
கதிரவன் வரவை கண்டதாலோ.........
காதலில் முகம் சிவந்தது.....புரியவில்லை..
பார்வை எனபது எது...
காற்றை கூட பார்க்க முடியாத கண்கள்......
கடவுளையா காணப்போகிறது........
கண்களை மூடி காண்கின்றாயே...கனவு
அது எந்த வகை பார்வை.....
...முடிந்தால் மூன்றாம் கண்ணை திற....
முடியும் உன்னால் அவனை காண......
பேசும் நிலவினை வானில் காண்கிறேன்..........
பேதை என்மனம் ஏக்கம் கொள்ளுதே.....
வானில் நிலவு வலம் வரும் போது...
மேகம் வந்து மெல்லென தழுவுதே...
மேகத்தழுவலில் நாணம் கொண்ட..
வெண்நிலவு ஓடி ஒளிந்தது.....
பகலிலில் தோன்றும் நிலவே...உனை
பார்க்கையில் கரைந்தே போகின்றேன்..
இரவில் தோன்றும் நிலவை ...நீ
ஏக்கம் கொள்ள வைக்கிறாய் .......
ஏழ்மை.........
கஞ்சிக்கு போட உப்பில்லை அவளிடம்......
கண்ணீர் துளிகள் கஞ்சியில் பட ருசித்தது
கண்கள் காட்டும் உலகை...
கண்ணீர் காட்டும் உள்ளத்தை...
விண்ணும் காட்டும் நிலவை....
விண்ணீர் காட்டும் செழிமை
சிலுவையில் மனதை அறைந்தாய்........போதாதென்று.
ரத்தம் வடியாமல் வார்த்தைக் கத்தியால் குத்தினாய்........
செத்துப்பிழைக்க நான் என்ன யேசுவா..........
சோகம் என்தன் சொத்தாயாகினாயே
காற்றை சிறை பிடித்து...கவளமாக்கி
பையன் கையில் கொடுத்துவிட...அதில்
ஓட்டை போட்டு அவன் ..உள்ளிருந்த
காற்றை பறக்கவிட்டான் சுதந்திரமாய்......
அழகாய் பூக்கும் பூக்கள் கூட......
பறிக்கும் போது பரிதவிக்கும்.....
நேசம் அறியாத மனிதன்..
வேடம் பூண பறிக்கையிலே..
பாசமாக பழகிய கொடியிடம்...
விடை...பெறுவதனாலோ...
சிறகுகள் இருந்தும்....
பறக்க மனமில்லை...
உன் கைகளில்......
தவழ்வதாலோ.....
பகலில் தோன்றும் நிலவே...உனை
பார்க்கையில் கரைந்தே போகின்றேன்..
இரவில் தோன்றும் நிலவை ...நீ
ஏக்கம் கொள்ள வைக்கிறாய்
மேகம் வந்து நிலவை மறைத்ததால்...நான்
சோகம் கொண்டு தலை தொங்கப்போட்டேன்...
பாவம் நான் என நினைத்த காற்றும்..வான்
மேகம் விலக்கி என் சோகம் போக்கியது
என்னில் உன்னை புதைத்தேன்...
உயிரை அங்கே விதைத்தேன்...
என் கண்ணின் கருவிழி அகற்றி..
உன்னை அங்கே உருவகித்தேன்............
இனிதாய் ஒரு பொய் சொல்வாய்.........
இனி நானே என சொல்வாய்.....இந்த
பொய்களும் எல்லாம் வெறும்
பொய்களென உண்மை சொல்வாய்.......
வானம் முழுக்க நிலவை கேட்டேன்........
நிலவாய் வானம் மாற்றி தந்தாய்...
நன்றி கெடாத நட்பை கேட்டேன்..
நன்றியை என்தன் நட்பாய் தந்தாய்....
யுத்தம் இல்லா உலகம் கேட்டேன்...
......நித்தம் அன்பை பரிசாய் தந்தாய்...
துக்கம் இல்லா தூக்கம் கேட்டேன்..
பக்கம் முழுவதும் இனிமை தந்தாய்
உன்னை என்னில் உறைய கேட்டேன்..
என்னை நீயாய் ஏற்றுக்கொண்டாய்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்...
எளிமை என்னை சூழ தந்தாய்.......
புல்லை போன்ற பணிவை கேட்டேன்...
மென்மை கொண்ட மனதை தந்தாய்
பண் கொண்ட பாடல் பயில கேட்டேன்....
பாடலகள் அறியும் மனதை தந்தாய்...
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்..
கவிதை எழுதும் யாலம் தந்தாய்
ராஜராஜனின் வாளை கேட்டேன்....
சோழ வம்சத்து வாள்களை தந்தாய்..
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்....
வார்த்தைகள் எல்லாம் தேனாய் தந்தாய்..
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்....
...விரல்கள் எல்லாம் எழுத செய்தாய்
அலைகடலின் ஒரத்தில் ...உனை
அழகாக எழுதி வைத்தேன்..உன்
அழகில் மயங்கிதானோ......
அலையும் அள்ளி சென்றதோ
கல்லாமை ...உனில்
இல்லாமை செய்
பொல்லாமை..தனை
நில்லாமை ஆக்கு
முடியும் என்று... நீ
முடிவு செய்..பின்
முடிவு உன் கையில்
முடியும் வரை துடிக்காதே...
கனவு ........
நிறைவேறா ஆசைகள்......
நிறைவேறும் இடம்...
நிறைவேறும் ஆசைகள்...
உருவாகும் இடம்...................
விளைச்சல் அற்ற நிலமும்....
உளைச்சல் கொண்ட மனமும்...
எதற்கும் உதவாது...ஆனால்
உழவு செய்து நிலத்தையும்..
உரமூட்டி மனதையும்..
அழகாய் உருவாக்குவோம்
இனிதாய் ஒரு பொய் சொல்வாய்.........
இனி நானே என சொல்வாய்.....இந்த
பொய்களும் எல்லாம் வெறும்
பொய்களென உண்மை சொல்வாய்.......
கால்கொலுசின் ஓசை கேட்டு.......
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
சூரியவிளக்கில் சுடர் விட்ட கிழக்கு.....
கிழக்கு சிவந்து கொண்டது நாணம்...
நாணம் வந்ததால் வானம் சிவந்தது..
சிவந்த வானில் சூரியன் மிதக்க...
மிதந்த வேளை வானம் மலர்ந்துகொண்டது
வாழ்க்கை என்பது அழகிய கண்ணாடி..
பார்த்துக்கொள்வதும் பயன்படுதுவதும்..
உன்தன் கைகளில் ...கவனமின்றின்..
காயம் கைகளில்...மனதினில்.......

mardi 12 octobre 2010

இருப்பிழந்து போனாலும் ...........மனதில்..
நெருப்பிழந்து போகவில்லை..........
விடுதலை தீ விளையாட்டல்ல .......என்றோ
ஒரு நாள் எரிக்கும் ...........எதிரியின்
எண்ணதீதினை கருக்கும்
முத்துத்துளிகள் முகத்தில் பட...
வானம் நோக்கி விழிகள் போக...
நீலவானம் கருமை கொள்ள...
வானிலிருந்தோர் அருவி வந்த்தே..
தருமன் ஒன்றும் சத்தியசீலன் அல்லவே...
தன்னை காக்க குருவுக்கே பொய்யுரைத்தவன்தானே...
ஆனையை ஆளாக்கி அழகாய் சொன்னவன்தானே
கருவை சுமந்தாள்..உனக்காய்
தெருவை அளந்தாள்..உனக்கோர்
உருவை தந்தாள்..அவளுக்கு
பெருமை கொடுப்பாயா...
பூ இல்லா தோட்டத்தில்..தேனுக்காய்
வண்டுகள் வட்டமிடுகின்றன..அங்கு
நீ இருப்பதால் தானா.....வானுக்கும்
உன்மேல் ஆசைவந்து மழை தூவியதே
என் நெஞ்சில் நீ
உன் நினைவில் நான்..
பஞ்சிலிட்ட நெருப்பாய்...
பற்றினாய் என்னில்.......
அழகே இது உனக்காகவே...
அன்பை அள்ளி தெளிக்கின்றேன்..
பனிக்கால மழைக்காற்றாய்..உன்
பக்கம் வருவேனே...
வெயில்கால வேனில் காற்றாய்..உன்
...வியர்வை துடைப்பேனே...
நிலவை பிடித்து உன் நெற்றியில்...
பொட்டாய் வைத்து கொள்வேன்..உன்
நிழலாய் யாரும் வருவதற்கு..
அனுமதி கொடுக்கமாட்டேன்.
விடியலுக்காய் மலரும் மலர்கள்..வாழ்வின்
விடியலுக்காய் மலரும் மனங்கள்
பிள்ளை அழுவதற்காய் கிள்ளி........
தொட்டிலை ஆட்டும் உத்தமர்...
எத்தனை பேர் இந்த உலகில்...
வேடதாரிகளின் கபட நாடகம்..
புரிந்து கொள்ளாதோர் எத்தனை........
மலர் ஒன்று வண்டிற்காய்
தேன் ஏந்தி நிற்கிறது..உன்
மனம் என்ற மலருக்காய்.
வண்டாகி போகின்றேன்
இரவோடு ஓடிவரும் அழகான வெண்ணிலவே....
இதயத்தை அள்ளி செல்லும் மாயத்தை சொல்வாயா..
சுட்டெரிக்கும் சூரியனின் தீக்கதிர்களை வாங்கி...
பனிமழையாய் பொழியும் உன் மாயத்தை என்ன சொல்வேன்
பூவின் வாசம் காற்றும் காவி செல்லும்...
காவி செல்லும் வழியில் ...உன்தன்
கள்ளச்சிரிப்பை பார்த்து ..உன்னில்
காதல் கொண்டு வாசம்...வாசம் செய்ததோ
வெள்ளிக்கிண்ணம் கைகளில் ஏந்தி..
கிண்ணம் நிறைய பாலினை நிரப்பி..
பாலகன் வெற்று வயிற்றுடன் ..
எஜமானின் நாய்க்குட்டிக்காய்.
பாசமாக ஊட்டுகிறான்..நன்றியாய்
...வாலை ஆட்டிய நாய்குட்டியை...
எஜமான் ஏ.சி காரில் ஏற்றி செல்கிறான்..
குட்டி விட்டு வைத்த மீதி பிஸ்கட்டை..
குழந்தை உண்கிறது........
வறுமை...வெறுமை கொண்ட மனதிலா
மழை நின்றதும்.....
மரம் அழுதது..
இலைகளில் வழியும்
நீர்த்துளிகள்
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
...அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
இரவெல்லாம் பூவிதழில் தங்கிய பனிதுளி........
காலை சூரியனின் கபட சிரிப்பில் மயங்கி.....
உள்ளம் பறிகொடுத்து உருகியதால்...
துளியிடம் காதல் கொண்ட பூ அழுத்து.....
நாட்டு நடப்பு................
மாற்றத்துக்காய் காத்திருந்து........
ஏமாற்றதினை கண்டுகொண்டேன்
கனவுகளின் வரும் என் கவிதைதுளியே......
காவியதில் வரும் கவிநயமே....அழகு
ஒவியதின் தூரிகையே .....பெண்ணே
நீ என் கனவு தாரிகையே
 பனி படரந்த மலர்கள பட்டும் ....என்தன்
மேனி சிலிர்க்கவில்லை...ஆனால்
பாவை உன் பார்வை பட்டதும்.......
உள்ளம் துடித்ததடி..உயிர் தவித்தது
மீண்டும்...மீண்டும் உன் நினைவுகள் ...எனை
தீண்டி... தீண்டி செல்கிறதே...........
வேண்டும்... வேண்டிம் உன உறவுகள்...அதை
வேண்டி..வேண்டி மனம் அலைகிறதே
வெண்ணிலவும் வந்து விடியும் காத்திருக்கும்..........
பெண்ணரங்கே உன் வரவுக்காய்......
எண்ணியிங்கே ஏக்கமுற.......
கண்ணிலவள் காவியமாய் வீற்றிருப்பாள்
தென்றலின் தொடுகை தேகத்தை வருடும்..........
பனிதுளிகளின் படுகை மேனியில் சிலிர்க்கும்.....
மழையின் சாரல் மனதை ஈர்க்கும்...........உன்
நினைவின் தீரம் உயிரை உலுக்கும்.................
பனித்துளி பட்ட பூவிதழ் .....பட்டு
சிலிர்த்த்து மேனி.......அதை விட...
உன் பார்வை பட்டதும் .......சிலிர்த்த்து
தேகம்.....தவித்தது உள்ளம்
தீந்தமிழ் மேல் நான் கொண்ட நேசம்...மாறாதே......
தேன் தமிழோடு நான் கொண்ட ..காதல்...மாறாதே......
பைந்தமிழ்மீது நான் வைத்த பாசம்...மாறாதே......
செந்தமிழ்மீது நான் வைத்த அன்பு.......மாறாதே
விழி வழியாய் நுழைந்து இதயதிலே விழுந்தாய்..ஒரு
மொழி இன்றி நீ பேசும் மௌனங்கள்..... என.
உயிரோடு உறவாடுதே
அமுதினை பொழிகின்ற அமுது நீயே......
அன்பினை அளிக்கின்ற அகல் நீயே.....
பகலினில் வருகின்ற நிலவு நீயே.........
பாசத்தை பொழிகின்ற நட்பு நீயே
பிரியாதவரம் வேண்டும் ............
பிரிந்தாலும் மறவாதவரம் வேண்டும் ............
மறந்தாலும் மீண்டும் நினைகின்ற வரம் வேண்டும் ............
நினைகின்ற பொழுதில் மனம் நெகிழ்கின்ற வரம் வேண்டும் ............
நெகிழ்கின்றவேளை உயிர் பிரிகின்ற வரம் வேண்டும் ............
......இதுதான நட்பு!!!!!!!!!!! இனிதான நட்பு !!!!!!!!!!!!!!!!!!!!
நிலவுமகள் இறங்கி நிலமருகே வந்தாள்.......என்
கனவுலகில் வந்து கவிதையினில் கரைந்தாள்....
சிறகடிக்கும் பறவையாய் நினைவினிலே வந்தாள்..
சிதறடித்து மனதை கலங்கடித்து சென்றாள்
தாய் வழி வந்த மொழி தனித்துப்போவதா..............
தமிழ் மொழி என்தன் உணர்ச்சிப்பூவடா.........
வாய் வழி பேசும் மொழியெல்லாம் நமதாகுமா..........
வாழும் வரை தமிழ் என் உயிர்ப்படா........
கருணையின் வடிவினாய் கண்ணா........கண்
மூடினும் உனமுகம் காண்பேன்.....
அன்பினின் உருவமே கண்ணா....அறிவு
அனைத்தையும் அருளுவாய்யே.........
இனிமையில் இருப்பாய் கண்ணா.......இருள்
...தனை போக்கி ஒளியினை தருவாயே...........
இரவு சூரியனே ........உன்னால்
இருளை போக்க முடிவதில்லையே ஏன்......
காலைககதிரவனின் கதிர்களை............. களவாடிக்கொண்டதாலா............
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........
எரிந்து அழிந்தது தீக்குச்சி............தீபம் ஏற்ற...
உருகி தவித்த்து மெழுகுவர்த்தி........தீக்குச்சிக்காய்.....
அழகான தமிழ் என்தன் உயிரானது ............
அதிலொன்று நீயானது..........
நட்புக்கள் நம்மை வரவேற்குமே..............
நம்பிக்கை வாழ்வின் நிலையானதே.....
இனிதான நட்பும் நீயானதே............
இமை மூடிக்கொண்டாலும மறையாததே.........
நினைவாலும் கனவாலும் உருவானதே..........
நிசமான அன்பினால் உயிரானதே....
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........