கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

இமை இரண்டும் முத்தமிட
பார்வை பறிபோனது..........
பார்வையின் ஸ்பரிசத்தில்....
இமைகள் தவித்தன......
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........
நீலவானில் தங்கத்தட்டாய் நிலவுமகள்......
மின்மினிபூச்சிகளாய் நட்சத்திரப்பட்டாளம்..
வெண்பஞ்சுக்கூட்டமாய் மேகங்கள்...வானை
பார்த்திருந்த மண்ணுக்கோ பொறாமை..
வெடித்து சிதறியது மண் மனது.....
தீப்பிழம்பாய் கோப அனலை க்க்கியது......
மண்மனம் புகைந்தது.....பார்த்திருந்த
வானம் கவலையில் முகம் கறுத்தது.........
தன்னையே தானம் செய்தது நெய்..
நெய் செய்கையால் மனம் ஈரமான
திரி..எரிந்து தவம் செய்த்து..........
தானமும் தவமும் சுடரை தந்தது...

my 1st poem...........

அழகான தமிழ் என்தன் உயிரானது ............
அன்பான மொழி நம் நட்பானது
நட்புக்கள் நம்மை வரவேற்குமே..............
நம்பிக்கை வாழ்வின் நிலையானதே..
என்னையும் கொஞ்சம் வாழவிடுங்கள்.
இழப்பதற்கில்லை எதுவும் என்னிடம்.
கடன் தர யாரும்மில்லை.எமை
கவனிப்பார் எவருமில்லை..
எதிரியும் காப்போனுமாய் சேர்ந்து.எனை
...ஏதிலியாக்கிவிட்டார்கள்..இப்போ
ஏக்கத்தையே சொந்தமாக்கிவிட்டார்கள்..
புலத்திலுள்ள புல்லுருவிகள்..என் பெயர்
சொல்லி ஒரு புறம் வயிறுவளர்க்க
களத்திலுள்ள கபோதிகளோ என்னையே
பகடைகாயாக்கி விற்பனை செய்யுதுகள்
பெருநிலப்பரப்பில் சுயமாய் சீவித்தவன்.இன்று
பெறுமதியற்றுப் போய்விட்டேன்.
நெஞ்சினில் பூத்த நெருப்புப்பூக்கள்...
வஞ்சக உலகின் வன்மம் கண்டு..
நெருப்பாய் பூத்த நெருடல்பூக்கள்....
முகன்று பார்க்க முல்லைபூவல்ல..
முயன்று பார்ப்பின் புரியும் ..
முடிவில் பூவை தெரியும்