என்னையும் கொஞ்சம் வாழவிடுங்கள்.
இழப்பதற்கில்லை எதுவும் என்னிடம்.
கடன் தர யாரும்மில்லை.எமை
கவனிப்பார் எவருமில்லை..
எதிரியும் காப்போனுமாய் சேர்ந்து.எனை
...ஏதிலியாக்கிவிட்டார்கள்..இப்போ
ஏக்கத்தையே சொந்தமாக்கிவிட்டார்கள்..
புலத்திலுள்ள புல்லுருவிகள்..என் பெயர்
சொல்லி ஒரு புறம் வயிறுவளர்க்க
களத்திலுள்ள கபோதிகளோ என்னையே
பகடைகாயாக்கி விற்பனை செய்யுதுகள்
பெருநிலப்பரப்பில் சுயமாய் சீவித்தவன்.இன்று
பெறுமதியற்றுப் போய்விட்டேன்.