கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

காலை வேளை கதிரவன் உதிக்கையில்.
சாலை ஒரம் நடந்து செல்கையில்..நான்கு
காலை உடைய சாம்பல் நிறத்து..
வாலை கொண்ட நாயை ஒரு
பாலை குமரி அழைத்து வருகையில்..நான்
வேலை செல்லும் வேளை வந்ததால்..என்
காலை கடித்தது நாய் ..பார்த்த
பாலை குமரி பதறிபோகிறாள்..நானோ
நூலை போல நொந்துபோகிறேன்..வைத்திய
சாலை செல்ல சொல்கிறாள் ...தான்
மாலை வந்து பார்ப்பதாய் சொல்லி..
சோலை கிளியாய் செல்கிறாள்.......என்
காலை வலி விட்டு மனதை தொட்டது....
மாலை வந்த மங்கை கையில் ஒரு
மாலை இருந்தது .. பார்த்த என்மனதில்
பாலை வார்த்தது போல இருந்தது...

Aucun commentaire:

Enregistrer un commentaire